
பீஜிங்: சீனாவில் ஒரே வாரத்தில் 13 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 13 முதல் ஜனவரி 19 வரையிலான காலகட்டத்தில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முன்னதாக கடைசியாக சீன அரசு, ஜனவரி 12 ஆம் தேதி வரை 60 ஆயிரம் பேர் கரோனாவால் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் சீனாவின் நோய்த் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், 681 பேர் கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தனர். 11 ஆயிரத்து 977 பேர் கரோனா தொற்றுடன் வேறு நோய்கள் இருந்ததால் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.