
விராலிமலை புகழ்பெற்ற அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற தை திருநாள் விளக்கு பூஜையில் 5 ஆயிரம் பெண்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மெய்கண்ணுடையாள் ஆலயத்தில் தை மாத பிறப்பை முன்னிட்டு 5000-க்கும் மேற்பட்டோர் விளக்கு பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.
விராலிமலையில் பிரசித்தி பெற்ற மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் தை மாத பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற திருவிளக்கு பூஜை விழாவில் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
உங்கள் நகரத்திலிருந்து(புதுக்கோட்டை)
விராலிமலையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் அப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்கிறது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாளில் பெண்கள் சிறப்பு அபிஷேக பூஜைகளிலும் திருவிளக்கேற்றி கூட்டு வழிபாடுகளிலும் ஈடுபடுவது வழக்கம்.
அதன் ஒரு பகுதியாக இன்று தை மாத பிறப்பை முன்னிட்டு விராலிமலை மெய்கண்ணுடையாள் அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் 5000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு ஒரே நேரத்தில் விளக்கேற்றி கூட்டு வழிபாட்டு பிரார்த்தனை.
பெண்கள் கூட்டமாக இணைந்து சுமங்கலி பூஜை செய்தனர் மேலும் நல்ல மழை பெய்து வேளாண்மை செழிக்கும் நோய் நொடி இன்றி மக்கள் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
அதற்கு முன்னதாக விநாயகர் பூஜை | கலச பூஜை ,கோ பூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டார்.விளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் முன்னாள் அமைச்சர் சார்பில் பொங்கல் பரிசாக மாங்கல்ய கயருடன் கூடிய பிரசாதம் வழங்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.