
சிவ பெருமான், அக்னி ரூபமாக காட்சி தரும் தலம் திருவண்ணாமலை. நிலமாக காட்சி தரும் தலம் காஞ்சிபுரம். நீராக காட்சி தரும் தலம் திருவானைக்காவல். ஆகாயமாக காட்சி தரும் தலம் சிதம்பரம். காற்றாக காட்சி தரும் தலம் காளஹஸ்தி. சிவ பெருமானே பஞ்ச பூதமாக உள்ளார் என்பது, பஞ்ச பூதங்களும் சிவனுக்குள் அடக்கம் என்பதை உணர்த்துவதே இதன் தத்துவம்.
இந்த பஞ்சபூத தலங்கள் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் இது தவிர சென்னை பஞ்சபூத தலங்கள், மதுரை பஞ்சபூத தலங்கள், தென்பாண்டி பஞ்சபூத தலங்கள் என பல இடங்களில் சிவ பெருமான் கோவில் கொண்டுள்ள பஞ்சபூத தலங்கள் அமைந்துள்ளன. இந்த தலங்களில் வழிபட்டாலும் பஞ்சபூத தலங்களில் வழிபட்ட பலன் முழுமையாக கிடைக்கும்.
Guru Pradosham : குருவார பிரதோஷம் – யாரை, எப்படி வழிபட்டால் என்ன நன்மை நடக்கும்?
தென்னிந்தியாவில் உள்ள பஞ்ச பூத தலங்களுக்கு சென்று வழிபட முடியாதவர்கள், சில குறிப்பிட்ட ஊர்களில் உள்ள பஞ்சபூத தலங்களில் சென்று வழிபடலாம். அப்படி சென்னையில் உள்ள பஞ்ச பூத தலங்கள் பற்றிய விபரங்களை இங்கே பார்க்கலாம்.
சென்னை பஞ்சபூத தலங்கள் :
ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் (நிலம்) – தங்கசாலை (மின்ட்)
ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோவில் (நீர்) – புரசைவாக்கம்
ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் (நெருப்பு) – செளகார்பேட்டை
ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோவில் (காற்று) – பாரிமுனை
ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கோவில் (ஆகாயம்) – சூளை
sabarimala income : சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானத்தில் புதிய சாதனை – இத்தனை கோடிகளா!
இந்த தலங்கள் நவகிரக பரிகார தலமாகவும் விளங்குகின்றன. சென்னையில் உள்ள பஞ்சபூத தலங்கள் அனைத்தும் நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திலேயே சென்றடையக் கூடிய தொலைவில் உள்ளதால் ஒரே நாளில் இத்தலங்களுக்கு சென்று வழிபட்டு வர முடியும்.
பஞ்ச பூத தலங்கள் தவிர சிவ பெருமான் கோவில் கொண்டுள்ள தலங்கள் ஜோதிர்லிங்க தலங்கள், பாடல் பெற்ற தலங்கள், நவகிரக தலங்கள் என பல்வேறு பெயர்களால் சிறப்பித்து கூறப்படுகின்றன. இந்த சிவாலயங்களில் சென்று வழிபட்டால் முக்தி பெறுவது நிச்சயம் என புராண நூல்கள் குறிப்பிடுகின்றன. நாயன்மார்கள், சிவனடியார்கள், சித்தர்கள் இந்த தலங்களில் வழிபட்டே முக்தி நிலையை அடைந்ததாக சொல்லப்படுகிறது.