
கடுமையான பொருளாதார சூழல்
இது குறித்து கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம், கடந்த 2 ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியினை கண்டோம். அந்த வளர்ச்சிக்கு மத்தியில் புதியதாக வேலைக்கு பணியமர்த்தினோம். ஆனால் தற்போது நாம் மாறுபட்ட மோசமான பொருளாதார சூழலை எதிர்கொண்டு வருகின்றோம். இதனால் இந்த முடிவினை நிறுவனம் எடுத்துள்ளது. இந்த பணி நீக்கம் குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.

இது பாதிப்பை ஏற்படுத்துகிறது?
இந்த நடவடிக்கை ஊழியர்களின் வாழ்வில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பது என்னை பாதிக்கிறது. இதற்காக நான் முழு பொறுப்பேற்கிறேன் என தனது வருத்தத்தினையும் கூறியிருந்தார்.
இருப்பினும் சில தொழில் நுட்ப ஊழியர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில் நீங்கள் ஏன் பதவி விலகக் கூடாது, நீங்கள் தவறான பந்தயம் கட்டினால், நீங்கள் ஏன் பணத்தை செலுத்தக்கூடாது என்ற கேள்வியை விஷால் சிங் YourDOST இன்ஜினியரிங் இயக்குனர் எழுப்பியுள்ளார்.

சத்ய நாதெல்லா
மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சத்ய நாதெல்லாவையும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசியல் வாதிகள் கூட திருட்டுக்குப் பிறகு ராஜினாமா செய்வார்கள் என எதிர்பார்க்கிறார்கள் என, ஒரு லிங்க் இன் பதிவில் சிங் தெரிவித்துள்ளார். மொத்தத்தில் தலைவர்களின் தவறான முடிவுக்கு அவர்கள் பணம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

நம்பிக்கையற்ற ஒரு நாள்
மற்றொருவர் கூகுளின் இந்த முடிவை அதிர்ச்சியடைந்த பயனர் ஒருவர், கூகுள் இதனை செய்து முடிந்தால், மற்றவர்களிடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என பதிவிட்டுள்ளார்.
கூகுளில் புரோகிராம் மேனேஜராக இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட புல்கிட் பஹ்வா, தானும் மற்ற ஊழியர்களும் வரப்போகிறது என பயப்படுவார்கள். ஆனால் கூகுள் அதனை ஒரு போதும் செய்யாது என நினைத்தோம். ஆனால் கூகுள் அதனை செய்துவிட்டது. பல ஆண்டுகளாக நீங்கள் பணிபுரிந்த நண்பர்கள் மற்றும் சக பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டறிந்தோம். நேற்று ஒரு நம்பிக்கையற்ற ஒரு நாள் என்றும் புல்கிட் கூறினார்.

தொழில்சங்கத்தின் கருத்து
கடந்த காலாண்டில் மட்டும் 17 பில்லியன் டாலர் லாபம் ஈட்டிய ஒரு நிறுவனத்தில், பணி நீக்கம் செய்ய வேண்டியதன் அவசியம் என்ன என்பதை, ஆல்பாபெட் ஊழியர் சங்கம் விமர்சனம் செய்துள்ளது.
தொழிலாளர்கள் பாதுகாப்பான வேலை வாய்ப்பிற்கான ஆல்பாபேட்டை நம்பியிருக்க முடியாது என்று தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.

பெரும் அதிர்ச்சி
தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் இந்த நடைமுறை பணி நீக்க நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் டெக் நிறுவனங்கள் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கின்றனவோ?