
தை மாதம் வரும் முதல் பிரதோஷம் என்பதால் பாளையங்கோட்டையில் உள்ள திரிபுராந்தீசுவரா சிவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. அதன்படி நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிவபெருமானுக்கு வில்வம் சாற்றியும் பக்தர்கள் வழிபட்டனர்.
பிரதோஷ பூஜையில் பச்சரிசி, வெல்லம் நெய்வேத்தியத்தை நந்திபகவானுக்குப் படைத்து நெய் விளக்கு ஏற்றுவது மிகச் சிறந்த பலன்களைக் கொடுக்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். சிவபெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றினால் அனைத்துப் பாவங்களும் நம்மை விட்டு நீங்கும். மேலும்,கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். தடை செய்யப்பட்ட காரியங்கள் யாவும் கைகூடும் என்பது ஐதீகம். சிவபெருமானைத் தரிசித்து, நந்தி தேவன், சண்டிகேஷ்வரரையும் பக்தர்கள் வணங்கினர்.
செய்தியாளர் : சந்தனகுமார் – திருநெல்வேலி
உங்கள் நகரத்திலிருந்து(திருநெல்வேலி)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: