
இந்திய அணி:
இந்நிலையில் தற்போது, இந்த 4 டெஸ்ட் போட்டிகள், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இருவரும் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
‘இந்தியாவுக்கு எதிரான’…4 டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!!எப்பா சாமி..எல்லாரும் அதிரடி வீரர்கள்!
இந்திய டெஸ்ட் அணி (முதல் 2 போட்டிகள்):ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), சுப்மன் கில், சேத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கட், சூர்யகுமார் யாதவ்.
வெற்றி யாருக்கு?
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றால்தான், ஜூன் முதல் வாரத்தில் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியது. இதனால், இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
கில்கிறிஸ்ட் பேட்டி:
ஆஸ்திரேலிய அணி இதற்குமுன் 19 வருடங்களுக்கு முன், 2004ஆம் ஆண்டுதான் இந்தியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றியது. அப்போது கேப்டனாக இருந்த ஆட்டம் கில்கிறிஸ்ட், தற்போது டெஸ்ட் தொடரை எந்த அணி கைப்பற்றும் என்பது குறித்துப் பேசினார்.
அதில், ”என்னைக் கேட்டால், இம்முறை ஆஸ்திரேலிய அணிதான் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என உறுதியாக உண்மை. 2004ஆம் ஆண்டில் நாங்கள் வென்றபோது ஆஸ்திரேலிய அணி போல்தான், தற்போதைய ஆஸ்திரேலிய அணி உள்ளது. அணியில் இருக்க கூடிய பௌலர்கள் அனைவரும் மிகச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக, நாதன் லைன் இம்முறை பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், ஆஸ்திரேலிய அணியில் புதுமுக ஸ்பின்னர்கள் சிலர் இடம்பெற்றுள்ளனர். இவர்களை இந்திய அணி சமாளிப்பது கடினம் தான்” எனக் கூறினார்.