
ஐகோர்ட்: உணவு பாதுகாப்பு சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்த பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தில் புகையிலை பொருட்களுக்கு முழு தடை விதிக்கவில்லை எனவும் ஐகோர்ட் குறிப்பிட்டுள்ளது.