
இத்தொடரில் சுப்மன் கில் 3 போட்டிகளில் ஒரு இடத்தை சதம், ஒரு சதம் உட்பட 350 ரன்களை குவித்து, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாமுடன் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், ரோஹித் ஷர்மாவும் கிட்டதட்ட 2 வருடங்களுக்கு பிறகு சதம் அடித்தார். இந்திய அணியும் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
மேலும், ஹார்திக் பாண்டியா இத்தொடரின் கடைசிப் போட்டியில் 38 பந்துகளில் 54 ரன்களை குவித்து, அணி 385/9 ரன்களை தொடுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார். மேலும், முதல் ஓவரிலேயே பின் ஆலனை டக்அவுட் ஆக்கி அசத்தினார்.
இர்பான் பதான் பேட்டி:
இந்நிலையில், ஹார்திக் பாண்டியாவின் செயல்பாடுகள் குறித்து இர்பான் பதான் புகழ்ந்து பேசினார். அதில், ”ஹார்திக் பாண்டியா பார்மில் இருந்ததால், அவரை கட்டுப்படுத்துவது முடியாத காரியம். சரியான நேரத்தில், பெரிய ஸ்கோரை அதிவிரைவாக அடிக்கும் ஆற்றல் அவரிடம் இருக்கிறது. ஆம், பழைய பந்தில் பேட்டர்கள் ரன்களை அடிக்க முடியாமல் தடுமாறும்போது, ஹார்திக் பாண்டியா மட்டும் சுலபமாக அந்த பந்துகளை எதிர்கொண்டு ரன்களை அடித்து வருகிறார்” எனக் கூறினார்.
ஒருசிலர்தான்:
மேலும் பேசிய அவர், ”பந்துவீச்சிலும் சிறப்பாக வருகிறார். பேட்டிங், பந்துவீச்சிலும் இவரைப் போல மிகச்சிறப்பாக செயல்படுபவர்கள் ஒருசிலர்தான். அரிய திறமை அவரிடம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
இந்தியா, நியூசிலாந்து இடையே ஒருநாள் தொடர் முடிந்த நிலையில், அடுத்து இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, விராட் கோலி போன்றவர்கள் இடம்பெறவில்லை. ஹார்திக் பாண்டியா தலைமையில் இளம் படை களமிறங்க உள்ளது. முதல் போட்டி நாளை இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.