
இதனால், அடுத்து இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், முதல் இரண்டு போட்டிகளிலும் இவர் உட்கார வைத்தனர். முரட்டு பார்மில் இருக்கும் இவரை வெளியில் உட்கார வைத்தது, கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடைசிப் போட்டியில் இவர் சேர்க்கப்பட்ட நிலையில், 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில், முரட்டு பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவை ஒருநாள் போட்டிகளில் அவ்வபோது மட்டும் சேர்ப்பதற்கு, முன்னாள் கேப்டன் கபில் தேவ் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
கபில் தேவ் பேட்டி:
அதில், ”இந்திய அணியின் தேர்வுக்குழு, எப்படி அணியைத் தேர்வு செய்தது என்பது தெரியவில்லை. இந்தியாவில் பல திறமையான கிரிக்கெட்டர்கள் இருக்கிறார்கள். அவர்களை வைத்து தனித்தனி ஒருநாள், டி20, டெஸ்ட் அணிகளை உருவாக்க முடியும். எனவே, சிலருக்கு சுழற்சி முறையில் வாய்ப்புகளை கொடுக்கிறார்கள். அது பிரச்சினை இல்லை”
”அப்படி சூர்யகுமார் யாதவுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு கொடுப்பதுதான், அதிருப்தியை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. சதமடித்து ஆட்ட நாயகன் விருதுகளை வென்றுகொடுக்கும் ஒரு வீரரை அடுத்த போட்டியில் எப்படி நீக்குகிறீர்கள்? சூர்யகுமார் ஒரு மேட்ச் வின்னர். ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு இவர் இல்லாமல் செல்வது முட்டாள் தனம். எனவே, ரோஹித் ஷர்மா இவருக்கு நிச்சயம் லெவன் அணியில் இடம் கொடுப்பார் என நிச்சயதார்த்தம்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ”அப்படியிருக்கும்போது, சூர்யகுமாரை ரெகுரலாக களமிறக்குவதுதான் சரியான முடிவாக இருக்கும். அவரை பென்சில் அமர வைப்பது முழுக்க முழுக்க தவறான முடிவுதான். தயவுசெய்து, ரோஹித்துக்கு தேர்வுக்குழுவும், ரோஹித் ஷர்மாவும் சூர்யகுமாரை ரெகுலராக களமிறக்க வேண்டும்” என கபில் தேவ் வலியுறுத்தியுள்ளார்.
தற்போது இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 31 (26) ரன்களை எடுத்தார். இத்தொடரில் இருந்து கே.எல்.ராகுல் விலகியதால்தான், சூர்யகுமார் யாதவின் வாய்ப்பிற்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இப்போட்டியில் சுப்மன் கில் 208 (149) ரன்களை குவித்து, மேட்ச் வின்னராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.