
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘ஜதி ரத்னலு’ என்ற ஹிட் படத்தை கொடுத்த தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி அமைத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் இந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. மேலும் தீபாவளி ரிலீசாக வெளியான இந்த படம் ஒரே வாரத்தில் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் தனது அடுத்தப்படத்தை ஹிட்டாக்கி விட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது ‘மண்டேலா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான மடன் அஸ்வின் கூட்டணியில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார்.
விஜய்: அது என்னோட தப்பா இருக்கலாம்: விஜய் குறித்து அப்பா எஸ்.ஏ.சி. சொன்ன விஷயம்.!
அண்மையில் பூஜையுடன் துவங்கிய இதன் படப்பிடிப்பு சிவகார்த்திகேயன், மேடன் அஸ்வின் இடையில் ஏற்பட்ட சண்டை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது இணையத்தில் தீயாக செய்திகள் பரவியது. மேலும் ஏற்கனவே எடுத்த காட்சிகள் சிவகார்த்திகேனுக்கு திருப்தி அளிக்காததால், மீண்டும் ரீ ஷட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Kamal Haasan: போடு வெடிய.. ஆண்டவரின் அடுத்த பட ரிலீஸ்: வெளியான அதிரடி அறிவிப்பு.!
இந்நிலையில் இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் அதிரடியாக மறுத்துள்ளது. இது தொடர்பாக தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்க தயாரிப்பு நிறுவனம், “அடிப்படையற்ற பொய்யான தகவல்கள் இணையத்தில் ‘மாவீரன்’ படம் பரவி வருகிறது. நீங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். நினைவில் நிற்கும் ஒரு படமாக மாவீரன் உருவாகி வருகிறது” எனக் கூறியுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது நிம்மதியடைந்துள்ளனர்.