
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே மணக்காவிளையை பகுதியை சேர்ந்தவர் நாஞ்சில் சம்பத். திமுக, மதிமுக, அதனை தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பிரதிநிதியாக இருந்து அரசியல் பணியாற்றியவர்.
தமிழ்நாட்டில் மேடை பேச்சுகளில் ஒரு முன்னிலை பேச்சாளராக இருந்து வருகிறார். குறிப்பாக பட்டிமன்றங்களாக இருந்தாலும் சரி இலக்கிய மேடையாக இருந்தாலும் சரி அரசியல் மேடையாக இருந்தால் சரி தன்னுடைய பேச்சாற்றலால் தமிழக மக்களை வசப்படுத்துபவர் நாஞ்சில் சம்பத்.
சென்னையில் இருந்த அவர் ரயில் மூலம் இரண்டு தினங்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்தார். அதன் பின்னர் உடல் நலம் சரியில்லாததால் திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார். மூளையில் ரத்த கசிவு காரணமாக வலிப்பு ஏற்பட்டு ஞாபகம் மறதியும் ஏற்பட்டுள்ளது.
சுயநினைவு இல்லாமல் இருக்கும் நாஞ்சில் சம்பத்தை கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உரிய ஞாபகத் திறன் வர மூன்று நாட்கள் ஆகும் என கூறியிருக்கிறார்கள். நாஞ்சில் சம்பத் உடல் நலம் சரியில்லாமல் இருப்பது அரசியல் வட்டாரங்களிலும் சரி இலக்கிய உலகிலும் சரி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.