
உத்தர பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ் உள்ளிட்ட 6 பேருக்கு மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவிப்பு வழங்கப்பட்டது.
குடியரசு தின விழாவை ஒட்டி 26 பேருக்கு 2023ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை மத்திய அரசு கவர்ந்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவிற்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கு காலரா போன்றவற்றிற்கு தீர்வு அளிக்கும் ORS தீர்வு கண்டுபிடித்து உலக அளவில் 5 கோடி உயிர்களை காப்பாற்றிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் திலிப் மஹலனபிலிஸ்க்கு மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கி மத்திய அரசு கௌரவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து கலைத்துறை சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “மத்திய அரசின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விருது கிடைக்கும் என நினைக்கவில்லை. விருது பெற காரணமாக இருந்ததால் எனது ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி” என தெரிவித்தார்.
மேலும், உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்று விஷ தன்மை வாய்ந்த பாம்புகளை பிடித்துவரும் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் இருளர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி ஆர்.ஆர்.ஆர் திரைப்பட இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவரது பாடல் ‘நாட்டு நாட்டு’ சமீபத்தில் அகாடமி விருதுகளை வென்றது, தற்போது ஆஸ்கர் நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: