
கும்பாபிஷேக விழாவை காண ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களில் 2000 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர், மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக நாளில் ரோப் கார் போன்ற மலைக்கோவிலுக்கு செல்வதற்கான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், படி வழியாக மட்டுமே 2000 பேரும் மலைக் கோவிலுக்கு செல்ல முடியும்.
கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் ஒரு புறமும், பக்தர்களுக்கான ஏற்பாடுகளும் ஒரு புறமும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பழனிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் பக்தர்கள், மலை அடிவாரத்தில் காவடி எடுத்து வந்து, கிரிவலம் சென்று வருகின்றனர். கிட்டதட்ட நான்கு மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குருவாயூர் கோவிலில் குவிந்து கிடக்கும் 260 கிலோ தங்கம்
கும்பாபிஷேகத்திற்கு இன்று 2 நாட்கள் இருக்கையில் இப்போது எதற்காக பக்தர்கள் கூட்டம் திடீரென ஆரம்பித்தது என பலரும் குழம்பி உள்ளனர். ஆனால் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் நாளை (ஜனவரி 26) பிறப்பால் மட்டுமே மூலவரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பிறகு பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, கும்பாபிஷேக பூஜைகள் துவங்கப்பட உள்ளன.
மலை மீது சென்று கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள 2000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டாலும், திண்டுக்கல் மாவட்டம் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் பழனி கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் கும்பாபிஷேக வைபவங்களை கண்டு தரிசனம் செய்ய மலை அடிவாரம் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை பல இடங்களில் ஏலிடி திரைகள் அமைத்து கும்பாபிஷேக நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Elarai Sani Pariharam: ஆஞ்சநேயரை ஏழரை சனி பிடித்த கதை தெரியுமா?
கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.