
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்கள் எங்கிருந்தாலும் பிரசாதத்தைப் பெற்றுக் கொள்ளும் படி அறநிலையத்துறை ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் அறுபடை வீடுகளிலும் குவிவது வழக்கம். இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் வீட்டில் இருந்தே பிரசாதங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில், “விரைவு அஞ்சல் சேவை” என்ற பெயரில் தைப்பூசத்திற்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி பிரசாதத்தைப் பெற ரூ.250 செலுத்த வேண்டும், அருகில் உள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், பிறகு வீட்டு வாசலுக்கே பிரசாதம் டெலிவரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நகரத்திலிருந்து(திண்டுக்கல்)
இந்த பிரசாத தொகுப்பில், சுவாமி புகைப்படம், பழனி பஞ்சாமிர்தம், விபூதி பிரசாதம் இணைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.