
பழனி கோவில் கும்பாபிஷேகம்
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாவது படை வீடாக போற்றப்படுவது பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். இக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மலைக்கோவிலான இக்கோவிலுக்கு ஆண்டுதோறும் பக்தர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள்.
பழனி முருகன் கோவில் மூலவர் சிலை நவபாஷாணம் எனப்படும் ஒன்பது வகை நச்சுப் பொருட்களால் செய்யப்பட்டதாகும். இச்சிலை போகர் சித்தரால் உருவாக்கப்பட்டதாகும். இச்சிலை மீது இரவு முழுவதும் சந்தனம் காப்பு அணிவிக்கப்படும். மறுநாள் காலை இந்த சந்தனம் சிறிய உருண்டைகளாக பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது பலவிதமான நோய்களை குணப்படுத்தும் மருந்தாக அமைவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
Thai Amavasai : தை அமாவாசை எப்போது? தர்ப்பணம் கொடுக்கும் நேரம், செய்ய வேண்டிய விஷயங்கள்
கும்பாபிஷேகம் தேதி : palani temple kumbabishekam date

பல்வேறு சிறப்புகளைக் கொண்ட பழனி மலைக்கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜனவரி 27 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. கடைசியாக பழனி கோவிலுக்கு 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தற்போது கோவிலின் தங்க கோபுரம், தங்கத்தேர், தங்க கவசம், மயில்வாகனம் ஆகிய இடங்களில் தங்க முலாம் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முன்பதிவு செய்யும் முறை:

இக்கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் கோவில் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவிலின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.palanimurugan.hrce.tn.gov.in, www.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், ஓட்டுநர் உரிமம் இவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து , அதோடு தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்க முன்பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு செய்யும் தேதிகள்

ஜனவரி 18 ஆம் தேதி முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் முன்பதிவு செய்யும் 2000 பக்தர்கள் மட்டுமே கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த பக்தர்களின் தேர்வான 2000 பேருக்கு ஜனவரி 22 ஆம் தேதி இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் முன்பதிவு உறுதி செய்யப்படும்.
பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள்:
முன்பதிவு உறுதி செய்யப்பட்ட பக்தர்கள் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பழனியில் உள்ள வேலவன் ஓட்டலுக்கு சென்று உரிய ஆவணங்களை அளித்து, இலவசமாக கும்பாபிஷேக டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த இரண்டு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே டிக்கெட்டுகளை பெற முடியும். கும்பாபிஷேக டிக்கெட் பெற்ற பக்தர்கள் படி வழியாக மட்டுமே மலைக்கோவிலுக்கு செல்ல முடியும். ரோப்கார், எலக்ட்ரிக் ரயில் போன்ற சேவைகள் இந்த நாட்களில் செயல்படாது என கோவில் நிர்வாகத்தினர்.
தீவிர பாதுகாப்பு

16 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது, பிப்ரவரி 05 ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதனால் பக்தர்கள் எளிதில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.