
இந்திய அணி:
இந்நிலையில் தற்போது, இந்த 4 டெஸ்ட் போட்டிகள், முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்கும் இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் இருவரும் அறிமுக வீரர்களாக இடம்பெற்றுள்ளனர்.
‘இந்தியாவுக்கு எதிரான’…4 டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!!!எப்பா சாமி..எல்லாரும் அதிரடி வீரர்கள்!
இந்திய டெஸ்ட் அணி (முதல் 2 போட்டிகள்): ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணைக் கேப்டன்), சுப்மன் கில், சேத்தீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர், கேஎஸ் பரத், இஷான் கிஷன், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது முகமது சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனாத்கட், சூர்யகுமார் யாதவ்.
அஸ்வின் சேர்ப்பு:
இந்த டெஸ்ட் அணியில், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளதுதான் சிறப்பம்சம். இவர் டெஸ்டில் இடது கை பேட்டர்களுக்கு எதிராக தொடர்ந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தி வருகிறார். ஆஸ்திரேலிய அணியில் இடது கை பேட்டர்களாக டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், ரென்ஷோ ஆகியோர் உள்ளனர். இவர்கள் எவ்வளவு பெரிய பார்மில் இருந்தாலும், அஸ்வானில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை வீழ்த்த முடியும்.
ரென்ஷோ பேட்டி:
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் 26 வயது பௌலர் ரென்ஷோ, அஸ்வினை பார்த்து பயப்படுவதாக வெளிப்படையாகவே பேட்டி கொடுத்துள்ளார். அதில், ”அஸ்வினை எதிர்கொள்வது கடினமாக இருக்கும். அவரிடம் கேரம் பால் போன்ற பல வித்தியாசங்கள் உள்ளன. நிச்சயமாக சொல்கிறேன், அஸ்வின் இடது கை பேட்டிகளுக்கு நிச்சயம் சவாலாக இருப்பார். இவரது பந்துவீச்சில் இடது கை பேட்டர்கள் LBW ஆக அதிக வாய்ப்புகள் உள்ளன” எனக் கூறினார்.
2017ஆம் ஆண்டு, இந்தியா வந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் ரென்ஷோ ஓபனராக இறந்தார். 4 டெஸ்ட் போட்டிகள், முதல் போட்டியில் அஸ்வின் பந்துவீச்சில்தான் ரென்ஷோ ஆட்டமிழந்தார். தற்போது, ஆஸ்திரேலிய லெவன் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், இவருக்கு 5ஆவது இடம்தான் வழங்கப்படும் எனக் கருதப்படுகிறது.