
தூத்துக்குடி: மார்க்கெட் அருகே போலியாக தயாரித்த ஹெராயின் போதை பொருள் விற்பனை செய்த இளைஞர் ரீகன் கைது செய்யப்பட்டுள்ளார். மார்க்கெட் அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றுகொண்டிருந்த ரீகனை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் யூரியா உரம் மற்றும் உப்பு ஆகியவற்றை பொடியாக்கி யூ ஹெராயின் விற்பனை செய்தது தெரியவந்தது. ரீகனிடம் இருந்து 10 கிலோ போலி போதைப் பொருளை பறிமுதல் செய்து வடபாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.