
சென்னை: ஜூடோ ரத்னம் மறைவுக்கு அமைச்சர் சாமிநாதன் மற்றும் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: இன்று மூத்த திரைப்பட சண்டை பயிற்சியாளரும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய பல்வேறு மொழி திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்தவருமான ஜூடோ ரத்னம் (வயது 94) வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் மன வருத்தம் அடைந்தேன். ஜூடோ ரத்னம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரைப்பட சண்டை பயிற்சி கலைஞர்களுக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.