
யூனியன் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்
யூனியன் ஃபோரம் ஆஃப் வங்கி யூனியன்கள் (யுஎஃப்பியு) இரண்டு நாள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக எஸ்பிஐ செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். இதன் எதிரொலியாக இவ்விரு நாட்களில் வங்கிக் கிளைகளில் பணிகள் பாதிக்கப்படலாம் எனத் தெரிவித்தார்.

ஸ்டேட் பாங்க் இந்தியா
எவ்வாறாயினும் ஸ்டேட் பாங்க் இந்தியா நிர்வாகம் நாடு முழுவதும் அதன் கிளைகளில் வழக்கமான செயல்பாடுகளைத் தொடரவும், வாடிக்கையாளர்கள் வங்கி போராட்டத்தால் பாதிக்கப்படாத வகையில் தேவையான முன் ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜனவரி 30 – 31
இந்திய வங்கிகள் சங்கம் (IBA) எங்களுக்கு அறிவுரை வழங்கிய நிலையில் யுனைடெட் ஃபோரம் ஆஃ பேங்க் யூனியன்கள் (UFBU) தனது கிளை அமைப்புகளுக்கு ஜனவரி 30 – 31 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுனைடெட் ஃபோரம் ஆஃ பேங்க் யூனியன்கள் (UFBU) அமைப்பின் கீழ் AIBEA, AIBOC, NCBE, AIBOA, BEFI, INBEF மற்றும் INBOC ஆகியவை உள்ளன.

வேலை நிறுத்த போராட்டம்
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து அமைப்புகளுக்கும் கோரிக்கைகளை ஏற்று 2023 ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வங்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஒப்புதல் அளித்துள்ளது.

11வது சம்பள செட்டில்மென்ட்
ஜனவரி 15 ஆம் தேதி யுனைடெட் ஃபோரம் ஆஃ பேங்க் யூனியன்கள் (UFBU) அமைப்பு ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தனது அமைப்புகளுடன் வங்கி ஊழியர்களுக்கான 11வது சம்பள செட்டில்மென்ட் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து நாடு தழுவிய வங்கி வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தது.

எஸ்பிஐ அறிவிப்பு
இந்த முடிவில் இருந்து பின்வாங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுவரை எந்தவிதமான அறிவிப்புகளும் இல்லாத நிலையில் எஸ்பிஐ வங்கி தனது வங்கி கிளை சேவைகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்
UFBU அமைப்பு வங்கிகளுக்கு வாரம் ஐந்து நாள் வேலை, வங்கி ஊழியர்களுக்கு தேக்கம் அதிகரிப்பு மற்றும் பதவி உயர்வு, சம்பளம் மற்றும் ஓய்வூதிய நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது போன்ற பல முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து இந்த இரண்டு நாள் போராட்டம் நடத்தப்படுகிறது.