
மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் செவ்வாய்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 563 புள்ளிகள் (0.9 சதவீதம்) உயர்வடைந்து 60,656 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 158 புள்ளிகள் (0.8 சதவீதம்) உயர்வடைந்து 18,053 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வாரத்தின் இரண்டாவது நாள் வர்த்தகத்தை பெரிய மாற்றமின்றி தொடங்கிய போதிலும் விரைவில் ஏற்றத்தை நோக்கிச் சென்றன.காலை 09.38 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 280.69 புள்ளிகள் உயர்வடைந்து 60,373.66 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 28.20 புள்ளிகள் சரிந்து 17,923.05 ஆக இருந்தது.