
இதனைத் தொடர்ந்து மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் துவங்கி நடைபெறவுள்ளது. போட்டியிலும் இந்திய அணி வெற்றியைப் பெற்றால், ஒருநாள் தரவரிசையில் இந்திய அணி நம்பர் 1 இடத்தைப் பிடிக்கும். இதனால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமது ஷமி அபாரம்:
இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் முகமது ஷமி 10 ஓவர்களில் 69/1 ரன்களை விட்டுக்கொடுத்து சொதப்பியிருந்தார். குறிப்பாக, இவர் மட்டும்தான் ஓவருக்கு சராசரியாக 6 ரன்களுக்கு மேல் கசியவிட்டிருந்தார். இதனால், இரண்டாவது போட்டியில் ஷமிக்கு மாற்றாக உம்ரான் மாலிக்கை கொண்டு வர வேண்டும் என பலர் பேச ஆரம்பித்தார்கள். இருப்பினும், ரோஹித் ஷர்மா ஷமிமீது முழு நம்பிக்கை வைத்து இரண்டாவது போட்டியில் ஆட வைத்தார்.
ஷமியும் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் இரண்டாவது போட்டியில் 6 பேர் வீசி வெறும் 18 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால்தான், நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு சுருண்டது.
முகமது ஷமி பேட்டி:
இப்போட்டி முடிந்த பிறகு முகமது ஷமி பேட்டி கொடுத்தார். உம்ரான் மாலிக்தான் இவரை பேட்டியெடுத்தார். அப்போது, ஷமி உம்ரானுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். அதில், ”உம்ரான் உங்களிடம் விட முயற்சி என்பது மிக அதிகமாக உள்ளது. ஆனால், உங்களிடம் அதிக வேகம் இருப்பதுதான், உங்களுக்கு சவாலானதாக இருக்கிறது. அதிவேகத்துடன், சரியான லைனில், லெந்தில் உங்களால் பந்துவீச முடியவில்லை. பந்துவீச்சை இன்னும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முயற்சிகள்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், ”அதுமட்டும் நடந்துவிட்டால், உங்களை மிஞ்சிய பௌலராக யாராலும் இருக்க முடியாது. நீங்கள்தான் நம்பர் 1 பௌலராக இருப்பீர்கள்” எனக் கூறினார். அடுத்துப் பேசிய உம்ரான், ‘கடினமான சூழலில் எப்படி பந்துவீசுவது?’ எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷமி, ”இந்தியாவுக்காக விளையாடினால், முதல் தகுதியை பதற்றமடையக் கூடாது. பதற்றமடைந்தால், நமது திட்டத்தை சரியாக செயல்படுத்துவது. எந்த அழுத்தங்களும் இல்லாமல் இருந்தால்தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.