
புதுடெல்லி: பேரா முறைகேடு வழக்கில் டி.டி.வி.தினகரனுக்கு எதிரான ஆவணங்களை சீலிடப்பட்ட கவரில் மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டி.டி.வி.தினகரன் இங்கிலாந்தில் உள்ள பார்க்லே வங்கியில் 1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் அமெரிக்க டாலரை முறைகேடாக டிப்பர் இன்வெஸ்மெண்ட் மூலமாக டெபாசிட் செய்ததாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கத்துறை டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 1996ம் ஆண்டு அமலாக்கத்துறை டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த இரண்டு வழக்குகளும் சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளுக்கான நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இது மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, பேரா வழக்கில் டி.டி.வி தினகரனுக்கு எதிராக மூன்று வாரங்களில் சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர் ஏப்ரல் மாதம் விசாரணையை ஒத்திவைத்தனர்.