
கலிபோர்னியா: ஒரே நேரத்தில் 100 புகைப்படங்கள் அனுப்பப்படும் வசதி வெகு விரைவில் வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்அப் பயனர்கள் ஒரே நேரத்தில் 30 போட்டோக்களை மட்டுமே அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள இத்தளம் வருகிறது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரை இப்போது குழுவாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.