
டெல்லி: கலவரம், பிரதமர் மோடி குஜராத் தொடர்பாக பிரிட்டனில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பிபிசி தயாரித்து பிரிட்டனில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில் 2002ல் நடந்த குஜராத் கலவரம் பற்றிய பல தகவல்கள் இருந்தன. பிரிட்டன் அரசின் ரகசிய விசாரணையில் கலவரத்துக்கு மோடியே காரணம் என தெரியவந்ததாக ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கலவரம், பிரதமர் மோடி தொடர்பாக குஜராத்தில் ஒளிபரப்பப்பட்ட பிபிசி ஆவணப்படத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது; ஒருதலைப்பட்சமாக உள்நோக்கத்துடன் பிபிசி ஆவணப்படம் தயாரிப்பு என குற்றம் சாடிய அவர், மேலும் இந்த ஆவணப்படம் அதை உருவாக்கிய ஏஜென்சியின் எண்ண ஓட்டமாகும். இது ஒரு பிரச்சாரப் பகுதி, அதில் பாரபட்சம் மற்றும் காலனித்துவ மனப்பான்மை உள்ளது. அத்தகைய திரைப்படத்தை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றும் கூறியுள்ளது. இதனிடையே ஆவணப்படத்தை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்ததால் பிபிசி யூடியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.