
வட மாநிலங்களில் குளிர் அலை எச்சரிக்கையாக நீடித்தது வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.நாட்டின் வட மாநிலங்களின் கடந்த சில வாரங்களாகவே குளிர் உச்சம் தொட்டுள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலை வேளைகளில் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து சேவைகள் கடுமையான நெருக்கடியை சந்தித்துள்ளன. கடந்த வாரத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட விமானங்களும், தினசரி 500க்கும் மேற்பட்ட ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் குளிர் காலத்தின் தாக்கத்தால் மாரடைப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
எனவே, கடுங்குளிர் வீசும் காலை நேரத்தில் வெளியே செல்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு மருத்துவ நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில், இந்த குளிர் அலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், மேற்கு மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜனவரி 18ஆம் தேதி வரை குளிர் அலை வீசும். வட மேற்கு மற்றும் இந்தியாவின் மத்திய சில இடங்களில் 2 டிகிரி கீழ் வெப்ப நிலை குறையும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் குளிர் பூஜ்ஜியத்திற்கு கீழ் மைனஸ் டிகிரி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இன்று பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், குளிர் அலை பாதிப்பை கருத்தில் கொண்டு பள்ளிகள் இயங்கும் நேரம் அங்கு மாற்றப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.