
மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின் போது சென்செக்ஸ் 238 புள்ளிகள் சரிவடைந்து 59,967 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 60 புள்ளிகள் சரிவடைந்து 17,832 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை சரிவுடனேயே தொடங்கின. காலை 09:57 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 585.31புள்ளிகள் சரிந்து 59,619.75 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 129.85 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 17,762.10 ஆக இருந்தது
உலகளாவிய சந்தைகளில் சாதமான சூழல்களுக்கு இடையில், அடுத்த வாரம் வெளியாகும் அமெரிக்க பெடரல் வங்கியின் நாணயக் கொள்கை, இந்திய பட்ஜெட் ஆகியவை மத்தியில் பங்குச்சந்தைகள் புதன்கிழமை வீழ்ச்சியடைந்தன. 238 புள்ளிகள் சரிவுடன் தொடங்கிய சென்செக்ஸ் விரைவில் 600 புள்ளிகள் சரிந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டாடா மோட்டார்ஸ், ஐடிசி, எம் அண்ட் எம், பஜாஜ் ஃபின்சர்வ், அட்ல்டரா டெக் சிமெண்ட், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்போசிஸ், மாருதி சுசூகி பங்குகள் உயர்வில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், என்டிபிசி, டிசிஎஸ், நெஸ்ட்லே இந்தியா, இன்டஸ்இன்ட் பேங்க், விப்ரோ, பவர் கிரிடு கார்ப்பரேஷன், டெக் மகேந்திரா, பாரதி ஏர்டெல், எல் அண்ட் டி, டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஈசியன் பெடஸ்ட்ரீஸ், ஹெச்.எஃப்.டி. , ஐசிஐசிஐ வங்கி பங்குகள் சரிவில் இருந்தன.