
மத்திய பட்ஜெட் 2023
பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கைகள் கட்டாயம் தனிநபர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் கட்டாயம் சில தளர்வுகள் வேண்டும் என்பதால் மத்திய அரசின் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

பல நெருக்கடி
மத்திய அரசு ரெசிஷன் அச்சம், பணவீக்கம், சர்வதேச சந்தையில் டிமாண்ட் சரிவு, ஏற்றுமதி பாதிப்பு, அன்னிய செலாவணி கையிருப்பு, வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சனைகளுக்கு மத்தியில் தான் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாத சம்பளக்காரர்கள்
இந்தப் பட்ஜெட் மாத சம்பளக்காரர்கள் தற்போது எதிர்பார்க்கும் போது 5 லட்சம் வரையிலான வருமானத்திற்கு ஜீரோ வருமான வரி விதிப்போ அல்லது 80சி பிரிவு கூடுதல் வரி விலக்கு வரம்பு விரிவாக்கம் போன்ற விஷயங்களை அளிக்க முடியாத நிலையில் தான் மத்திய அரசின் நிதி நிலை உள்ளது.

கூடுதலாக வரிப் பலகை
இந்தச் சிக்கலைச் சமாளிக்கும் வகையில் தனிநபர் வருமான வரி விதிப்பில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பழைய வருமான வரி விதிப்பு
இந்தப் புதிய வரிப் பலகை பழைய வருமான வரி விதிப்பு முறைக்கு வர வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் முதலீட்டை சிறப்பாகத் திட்டமிட்டு முதலீடு செய்து வரிப் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

பட்ஜெட் ஏ டீம்
மத்திய நிதியமைச்சகம் மற்றும் பட்ஜெட் ஏ டீம் இதை உறுதி செய்யும் பட்சத்தில் அதற்கான அறிவிப்புப் பட்ஜெட் தாக்கலின் போது இடம்பெற்றது, இந்திய பட்ஜெட் அறிக்கை சர்வதேச ரெசிஷன் பாதிப்புகளில் இருந்து நாட்டின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் இருக்க வேண்டியது எவ்வளவு முக்கியமானது?

பட்ஜெட் அறிக்கை
புதிய வரி பலகையைச் சேர்ப்பது குறித்துப் பல நாட்களாகப் பட்ஜெட் ஏ டீம் ஆலோசனை செய்து அதைப் பற்றி பட்ஜெட் அறிக்கை சேர்த்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த அறிவிப்பால் மக்களுக்குப் பெரிய அளவிலான நன்மைகள் அளிக்கப்பட்டாலும் சிறிய அளவிலான மக்களுக்குக் கட்டாயம் நன்மை பயக்கும்.

வருமான வரி விதிப்பு முறை
தற்போது பழைய வருமான வரி விதிப்பில் 4 வரி பலகையில் 0, 5, 25, 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. புதிய வருமான வரிப் பலகையில் 7 பலகையில் 0-30 சதவீத வரி விதிக்கப்படுகிறது.