
பொதுவாக பிரம்மோற்சவம் (tirupati brahmotsavam) என்றால் 10 நாட்கள் நடைபெறும். சில கோவில்களில் 18 நாட்கள் வரை நடைபெறும். ஆனால் திருப்பதியில் ஒரு நாள் பிரம்மோற்சவம் வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும். இந்த விழாவை காண பக்தர்கள் திருமலையில் குவிவார்கள். 10 நாட்கள் பிரம்மோற்சவத்தின் போது நடக்கும் அத்தனை வைபவங்களும் இந்த ஒரே நாளில் நடத்தப்படுவது தான் இதன் தனிச் சிறப்பு. ஒரே நாளில் ஏழு வாகனங்களில் எழுந்தருளி மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
எந்த கோவிலுக்கு போனால் சொந்த வீடு வாங்கலாம்?
ஜனவரி 28 ஆம் தேதி தான் திருமலை திருப்பதியில் (திருப்பதி கோவில்) இந்த ஒரு நாள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. சூரிய ஜெயந்தி (surya jayanthi), ரத சப்தமி (ratha saptami) ஆகியவற்றை முன்னிட்டு இந்த ஒருநாள் பிரம்மோற்சவம் (ஒரு நாள் பிரம்மோற்சவம்) நடைபெற உள்ளது. இந்த நாளில் எத்தனை மணிக்கு என்ன உற்சவம், எந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி காட்சி தருவார் என்ற விபரத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
வாகனம், நேர விபரம் :
காலை 5.30 – 8 : சூரிய பிரபை வாகனம்
காலை 9 – 10 : சின்ன சேஷ வாகனம்
காலை 11 – பகல் 12 : கருட வாகனம்
பகல் 1 – 2 : ஹனுமந்த வாகனம்
பகல் 2 – 3 : சக்கர ஸ்நானம்
மாலை 4 – 5 : கல்பவிருட்சம் வாகனம்
மாலை 6 – 7 : சர்வ பூபால வாகனம்
இரவு 8 – 9 : சந்திரபிரபை வாகனம்
தை அமாவாசை விரதம், தர்ப்பணம் பற்றிய உங்கள் கேள்விகளும் எங்களின் பதில்களும்
ஒரு நாள் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஜனவரி 28 ஆம் தேதி மட்டும் வழக்கமாக நடத்தப்படும் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.