
இதேபோல அ.தி.மு.க கூட்டணி சார்பில் ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.வி. ராமலிங்கம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் தனித்தனியாக தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை த.மா.கா தலைவர் ஜி.கே .வாசன் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரை போட்டி போட்டு சந்தித்து தங்களது அணிக்கு ஆதரவு கொடுக்கும்படி கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஓ.பி. எஸ். தலைமையிலான ஆலோசனை கூட்டம் நாளை திங்கட்கிழமை சென்னையில் நடைபெற உள்ளது. இதில் இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பற்றி முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.