
ஒரு பக்கம் ஹீரோவாகவும், மறுபக்கம் வில்லனாகவும் கலக்கி வரும் விஜய் சேதுபதி தற்போது ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய், கமல் என முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து மிரட்டிய விஜய் சேதுபதி தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.
அட்லீ இயக்கும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் நடித்த அனுபவம் பற்றி பேசினார் விஜய் சேதுபதி. அவர், முதலில் ஜவான் படத்தில் ஷாரூக்கானுடன் நடிக்க பயந்தேன்.
சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் ஒரு நடிகருடன் நடிப்பில் எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. ஆனால் ஷாருக்கான் தான் ஒரு நடிகர் என்று காட்டிக்கொள்ளாமல் என்னிடம் இயல்பாக பழகினார். அது எனக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுத்தது. பின்பு பல விஷயங்களை அவரிடம் கேட்டு அறிந்துகொண்டேன்.
சில சமயங்களில் நான் அதிகமாக பேசுவதாக எண்ணி அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளேன். அதற்கு அவர் ஏன் மன்னிப்பு கேட்குறீங்க, என்ன வேணாலும் கேளுங்க பேசலாம் என்றார் விஜய் சேதுபதி. தற்போது ஜவான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.