
இதனைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி இன்று திருவனந்தபுரத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. போட்டிக்கான டாஸை வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் ஷர்மா 42 (49) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்த பிறகு சுப்மன் கில்லுடன், விராட் கோலி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்.
ஒருபக்கம் கோலி நிதானம் காட்ட, மறுபக்கம் சுப்மன் கில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து, இறுதியில் 97 பந்துகளில் 14 பவுண்டரி, இரண்டு சிக்சர்கள் உட்பட 116 ரன்களை எடுத்து, ரஜிதா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.
கோலி சதம்:
அடுத்து கோலி, ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இம்முறை ஷ்ரேயஸ் ஐயர் நிதானம் காட்ட, விராட் கோலி தொடர்ந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இறுதியில் கோலி 85 பந்துகளில் 10 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 100 ரன்களை எடுத்து அசத்தினார். இந்தியா 43 ஓவர்களில் 304/2 ரன்களை எடுத்தது.
இதனைத் தொடர்ந்து கோலி அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இறுதியில் 110 பந்துகளில் 13 பவுண்டரி, 8 சிக்சர்கள் உட்பட 166 ரன்களை குவித்து அசத்தினார். இதனால், இந்திய அணி 50 ஓவர்களில் 390/5 ரன்களை சேர்த்தது. ஷ்ரேயஸ் ஐயர் தனது பங்கிற்கு 38 (32) ரன்களை எடுத்தார்.
இலங்கை இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய இலங்கை அணியில் யாருமே 20+ ரன்களை அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஓபனர் நவனிது பெர்னாண்டோ 19 (27) ரன்களை அடித்தார். மற்றவர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்ட ஆரம்பித்ததால், இலங்கை அணி 22 ஓவர்களில் வெறும் 73/10 ரன்களை மட்டும் சேர்த்து, 317 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
அதிகபட்சமாக முகமது சிராஜ் 4/32 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஷமி, குல்தீப் யாதவ் இருவரும் தலா 2 விக்கெட்களை சாய்த்தார்கள்.
இந்திய அணி சாதனை:
ஒரு அணிக்கு எதிராக, ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்ற அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இதற்குமுன், 2008ஆம் ஆண்டு நியூசிலாந்து அணி அயர்லாந்துக்கு எதிராக 290 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றதுதான் சாதனையாக இருந்தது.